Friday, July 23, 2010

நான் புதியவன்....





அன்புத் தமிழ் நண்பர்களுக்கு.....

நீண்ட காலமாக இணையத்தில் வாசித்து வருகிறேன். எழுதும் எண்ணம் என்றும் இருந்ததில்லை.

நீண்ட யோசனைக்குப் பின் வந்திருக்கிறேன். என்ன, எப்படி எழுதவேண்டும் என இன்னமும் நான் நிர்ணயம் செய்யவில்லை.

எழுதத் தொடங்குமுன் உங்களுக்கு ஒரு முதல் வணக்கம் சொல்லிக் கொள்ளவே இந்தப் பதிவு.

விரைவில் சந்திப்போம்...!!!
.
.
.

4 comments:

Anonymous said...

என்னாது!
அனானி பின்னூட்டம் போட வழியில்லையா!!
இதை நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்!!!
இருந்தாலும் வாழ்த்துக்கள்...
(கருப்பு சட்டை போட சிறப்பு காரணங்கள் ஏதேனும் உண்டா? சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னுதான்...)

காபிக் கடை said...

நன்றி திரு.க.க.
முதல் கருத்துப் பதிந்தவர் என்ற முறையில் நீங்கள் வரலாற்றில் இடம் பிடித்திட்டீர்கள்.
நீங்க க.க.வா இருக்கலாம். ஆனா நான் தி.க. இல்லை. பயமோ மகிழ்ச்சியோ வேண்டாம்.
சில நேரங்களில் நான் பெரியார் சொந்தக் காரன். பல நேரங்களில் நான் ஐயப்ப பக்தன். ஆகவே கருப்பு சட்டை. (எப்படியோ சமாளிச்சாச்சு)

Anonymous said...

ஒரு நாளைக்கு எட்டு காப்பி குடிக்கிறவன் என்ற முறையில் என் ஆதரவு என்றும் காப்பிக் கடைக்கு உண்டு- கருப்பு சட்டை ஸ்ட்ராங்கான டிகாக்ஷனைக் குறிக்கிறது என்று சொல்வீர்களோ என்னவோ என்று நினைத்தேன். அப்படியானால் ஆரஞ்சு கலர்? அது தண்ணீர் கலக்காத புதுப் பாலை ஊற்றி நாலு ஆற்று ஆற்றினால் வருகிற நுரை என்று கற்பனை செய்து கொண்டேன்...

எது எப்படியோ, அடிக்கடி பதிவு பண்ணி கலக்குங்க.

முதல் பின்னூட்டத்துக்கானக்கான பரிசுத் தொகையை நீங்கள் தாராளமாக அனுப்பலாம்: அதைப் பெற்றுக் கொள்வது குறித்து எனக்கு எந்த தயக்கமும் கிடையாது...

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் புதிய வலைப்பூவுக்கும்.பெயர் வெகு சுவாரஸ்யமாக உள்ளது.கண்டிப்பாக அனைவரையும் கவர்ந்துவிடும்.

Post a Comment